முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Chinna Chinna Kannanukku - a Arts video.mp4






சின்னச்சின்னக் கண்ணனுக்கு 
என்னதான் புன்னகையோ
கண்ணிரண்டும் தாமரையோ 

கன்னம்மின்னும் என்தன்கண்ணா

பால்மணக்கும் பருவத்திலே 
உன்னைப்போல் நான்இருந்தேன்
பட்டாடைத் தொட்டிலிலே 
சிட்டுபோல் படுத்திருந்தேன்
அந்நாளை நினைக்கையிலே 
என்வயது மாறுதடா
உன்னுடன் ஆடிவர 
உள்ளமே தாவுதடா
(கண்ணிரண்டும் தாமரையோ கன்னம்மின்னும் என்தன்கண்ணா
சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ)

ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே 
விளைவது மழலையடா
ஈரேழு மொழிகளிலே 
என்னமொழி பிள்ளைமொழி
கள்ளமற்ற வெள்ளைமொழி 
தேவன் தந்த தேவமொழி
(கண்ணிரண்டும் தாமரையோ கன்னம்மின்னும் என்தன்கண்ணா
சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ)

இவ்வளவு நேரம் கொஞ்சிக் கொஞ்சி வந்த பாடல், ஒரு நொடியில்
நெஞ்சில் உள்ள சோகத்தையும் சேர்த்துச் சொல்வதாக மாறி விடுகிறது!
ஒரே பாடலில் இரு வேறு ரசனைகள்!
மழலை மகிழ்ச்சி, பின்பு தத்துவ நெகிழ்ச்சி!
அது எப்படி கண்ணதாசனுக்கு மட்டும் இந்த கைவந்த கலை? :-)


பூப்போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா
பொல்லாத கண்களடா 
புன்னகையும் வேஷமடா
நன்றிகெட்ட மாந்தரடா 
நானறிந்த பாடமடா
பிள்ளையாய் இருந்துவிட்டால் 
இல்லைஒரு துன்பமடா 
(கண்ணிரண்டும் தாமரையோ கன்னம்மின்னும் என்தன்கண்ணா
சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ)





கருத்துகள்