முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

paarthen sirithen - Veera abhimanyu 1965

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்  அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்  அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்  பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்  உனைத் தேன் என நான் நினைத்தேன்  அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன் பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்  அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்  அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்  பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்  உனைத் தேன் என நான் நினைத்தேன்  அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன் கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என  ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்  கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என  ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்  துளித் தேன் சிந்தாமல் களித்தேன் ஒரு  துளித் தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில்  அணைத்தேன் அழகினை ரசித்தேன் பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்  உனைத் தேன் என நான் நினைத்தேன்  அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன் மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென  வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன் மலர்த...

thanimaiyile inimai kaana mudiyuma song

தனிமையிலே இனிமைகாண முடியுமா?........... நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?(2) தனிமையிலே இனிமைகாண முடியுமா?... துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா? அதைச்சொல்லிச்சொல்லித்திரிவதனால் துணை வருமா?(2) மனமிருந்தால் வழியில்லாமல் போகுமா(2) வெறும் மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா? தனிமையிலே இனிமைகாண முடியுமா?........... நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?(2) தனிமையிலே இனிமைகாண முடியுமா?... மலரிருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை. செங்கனியிருந்தால் சுவையிருக்கும் தனிமையில்லை(2) கடல் இருந்தால் அலையிருக்கும் தனிமையில்லை.... நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை.. தனிமையிலே இனிமைகாண முடியுமா?........... நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?(2) தனிமையிலே இனிமைகாண முடியுமா?... பனிமலையில் தவமிருக்கும் மாமுனியும் கொடி படையுடனே பவனி வரும் காவலரும் கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும்  இந்த அவனியெல்லாம் போற்றும் ஆண்டவனாயினும் தனிமையிலே இனிமைகாண முடியுமா?........... நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?(2) தனிமையிலே இனிமைகாண முடியுமா?...

Kuzhal Oothum Kannanukku Song - KS Chithra - Mella Thiranthathu Kathavu ...

குழலூதும் கண்ணணுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா குக்கூ குக்கூ(2) என் குரலோடு மச்சான் உங்க குழலோச போட்டி போடுதா இலையோடும் பூவும் தலையாட்டும் பாரு இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு, பாரு(குழ) மலைக்காத்து வீசறபோது மல்லிகப்பூ பாடாதா? மழைமேகம் கூடுறபேது வண்ணமயில் ஆடாதா? என் மேனி.........தேனரும்பு......என்பாட்டு பூங்கரும்பு. மச்சான் நான் மெட்டெடுப்பேன்......... உன்னத்தான் கட்டிவைப்பேன்...... சுகமாகத் தாளம் தட்டிப்பாடட்டுமா? உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நானாச்சு கேளய்யா கண்ணா உன் வாலிப நெஞ்ச என் பாட்டு உசுப்புறதா?.... கற்கண்டு சக்கரையெல்லாம் இப்போதான் கசக்குறதா?.... வந்தாச்சு........சித்திரதான்.....போயாச்சு.........நித்திரதான் பூவான பொண்ணுக்குத்தான்...ராவானா....வேகுறதாம். மெதுவாக் தூது சொல்லிப் பாடட்டுமா?...... விளக்கேற்றும் பொழுதானா இள நெஞ்சம் படும்பாடு கேளய்யா. (குழலூதும்)

மாலைப்பொழுதின் மயக்கத்திலே

மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி(2) மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி.....(மாலை) இன்பம் சில நாள் துன்பம் சிலநாள்என்றவர் யார் தோழி..... இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது என் தோழி...(மாலை) . மணமுடித்தவர்போல் அருகினிலே ஒர் வடிவுகண்டேன் தோழி மங்கை என் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி..... அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி பறந்துவிட்டார் தோழி.(மாலை) கனவில் வந்தவர் யார் எனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி.... இளமையெலாம் ஒரு கனவுமயம் இதில் மறைந்தது சில காலம் தெளிவுமறியாது முடிவும் தெரியாதுமயங்குது எதிர்காலம். மயங்குது எதிர்காலம்(மாலை) மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி