இதயம்இந்த இதயம்
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ
ஆசைதூண்டிலில் மாட்டிக்கொண்டு
இது தத்தளித்துதுடிக்கிறதே......
காயம் யாவையும் தேற்றிக்கொண்டு
இது மறுபடியும் நினைக்கிறதே
உள்ளுக்குள்ளே துடிக்கும் சிறு இதயம்
எத்தனையோ கடலை இது விழுங்கும்
வேண்டும்வேண்டும் என்று கேட்கையிலே
வேண்டாம் வேண்டாம் என்றுசொல்லுமே
வேண்டாம் வேண்டாம் என்று விலகி நின்றால்
வேண்டும் வேண்டும் என்று துள்ளுமே
இதுதகித்திடும் நெருப்பா
இல்லைகுளிர்ந்திடும் நீரா
இது பனி எரி மலையா
இதை அறிந்தோர் யாருமில்லை
உள்ளத்திலே அறை உண்டு வாசலில்லை
உள்ளே வந்திடும் நினைவோ திரும்பவில்லை
தூங்கும்போது இது துடித்திடுமே
ஏங்கும்போதோ இது வெடிக்கும்
தீண்டும் விரல் இது தெரிந்தபின்னும்
வேண்டும் என்றே இது நடிக்கும்
இது கடவுளின் பிழையா
இல்லை படைத்தவன் கொடையா
கேள்வியில்லா விடையா
இதை அறிந்தோர்யாருமில்லை
இதயம் இல்லை ஏன்றால் என்ன நடக்கும்
கண்ணீர் என்னும் வார்த்தையை மாறி இழக்கும்.....
இதயம்இந்த இதயம்
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ
கருத்துகள்
கருத்துரையிடுக