ஆண்: என் காதலே என் காதலே
என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண் இரண்டை கேட்கிறாய்
ஆண்: சிலுவைகள் சிறகுகள்
ரெண்டில் என்ன தர போகிறாய்
ஆண்: கிள்ளுவதை கிள்ளி விட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
ஆண்: என் காதலே என் காதலே
என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண் இரண்டை கேட்கிறாய்
ஆண்: காதலே நீ பூ எறிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல் எறிந்தால்
எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்
ஆண்: இனி மீள்வதா இல்லை வீழ்வதா
உயிர் வாழ்வதா இல்லை போவதா
அமுதென்பதா விஷம் என்பதா
உன்னை அமுத விஷம் என்பதா
ஆண்: என் காதலே என் காதலே
என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண் இரண்டை கேட்கிறாய்
ஆண்: காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிக்கொண்டால்
நான் குலுங்கி குலுங்கி அழுதேன்
ஆண்: இது மாற்றமா தடுமாற்றமா
என் நெஞ்சிலே பனி மூட்டமா
நீ தோழியா இல்லை எதிரியா
என்று தினமும் போராட்டமா
ஆண்: என் காதலே என் காதலே
என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண் இரண்டை கேட்கிறாய்
ஆண்: சிலுவைகள் சிறகுகள்
ரெண்டில் என்ன தர போகிறாய்
கிள்ளுவதை கிள்ளிவிட்டு
கருத்துகள்
கருத்துரையிடுக