ஆண்:
அச்சச்சோ புன்னகை
ஆள்தின்னும் புன்னகை
கைகுட்டையில் நான் பிடித்து
கையோடு மறைத்துக் கொண்டேன்
பெண்:
அச்சச்சோ புன்னகை
அத்திப்பூ புன்னகை
சிந்தாமல் சிதறாமல்
முந்தானை எந்திக்கொண்டேன்
ஆண்:
உன் புன்னகை
எனும் சாவியால்
உன் புன்னகை எனும் சாவியால்
என் காதல் திறந்து கொண்டேன்
ஆண்:
அச்சச்சோ புன்னகை
ஆள்தின்னும் புன்னகை
கைகுட்டையில் நான் பிடித்து
கையோடு மறைத்துக் கொண்டேன்
ஆண்:
வார்த்தையில் காதலை சொன்னாய்
என் வாலிபம் நனைந்ததடி
உன்னை கலந்தபின் நான் சென்று குளித்தால்
கடல் குடிநீர் ஆகுமடி
கவிதை இது கவிதை
இன்னும் கற்பனை செய்வோமா
உயிரை இடம் மாற்றி
நம் உதடுகள் சேர்ப்போமா
ஆண்:
அம்மம்மா நுனி விரல் தொட்டே
என் இதயம் பதறியதே
ஆழங்கள் தொட என்னாகும்
என் உயிரே சிதறியதே
பெண்:
நீ தீண்டினால் ...
உயிர் தூண்டினால்
நீ தீண்டினால் உயிர் தூண்டினால்
நெஞ்சில் பொக்ரான் வெடிக்கிறதே
ஆண்:
அச்சச்சோ புன்னகை
ஆள்தின்னும் புன்னகை
கைகுட்டையில் நான் பிடித்து
கையோடு மறைத்துக் கொண்டேன்
பெண்ணுக்குள் இத்தனை சுகமா
அந்த ப்ரம்மனின் திறம் வாழ்க
எனக்குள் தூங்கிய சுகத்தை
இன்று எழுப்பிய விரல் வாழ்க
அடியே சுக வகையே
இன்னும் ஆயிரம் கோடியடி
கண்ணே கொஞ்சம் வளைந்தால்
என் கற்பனை நீளுமடி
வெட்கத்தை உன் முத்தத்தால்
நீ சலவை செய்துவிடு
பெண் தேகம் ஒரு பேரேடு
உன் பெயரை எழுதிவிடு
ஆண்:
இரு உதடுகள்
ஹொ ஹொ
என் எழுதுகோல்
ஹொ ஹொ
இரு உதடுகள் என் எழுதுகோல்
வா அன்பே வளைந்துகொடு
ஆண்:
அச்சச்சோ புன்னகை
ஆள்தின்னும் புன்னகை
கைகுட்டையில் நான் பிடித்து
கையோடு மறைத்துக் கொண்டேன்
பெண்:
அச்சச்சோ புன்னகை
அத்திப்பூ புன்னகை
சிந்தாமல் சிதறாமல்
முந்தானை ஏந்திக்கொண்டேன்
ஆண்:
உன் புன்னகை எனும் சாவியால்
என் காதல் திறந்துகொண்டேன
கருத்துகள்
கருத்துரையிடுக