ஆ: நான் மலரோடு தனியாக ஏன்
இங்கு நின்றேன்,
என் மகராணி உனை காண
ஓடோடி வந்தேன்,
நான் மலரோடு தனியாக ஏன்
இங்கு நின்றேன்,
என் மகராணி உனைகாண
ஓடோடி வந்தேன்,
பெ: நீ இல்லாமல் யாரோடு உறவாட
வந்தேன்,
உன் இளமைக்கு துணையாக தனியாக
வந்தேன்,
ஆ: நான் மலரோடு தனியாக ஏன்
இங்கு நின்றேன்
என் மகராணி உனை காண
ஓடோடி வந்தேன்..
ஆ: நீ வருகின்ற வழி மீது யார்
உன்னை கண்டார்,
உன் வளை கொஞ்சும் கைமீது
பரிசென்ன தந்தார்,
நீ வருகின்ற வழி மீது யார்
உன்னை கண்டார்,
உன் வளை கொஞ்சும் கைமீது
பரிசென்ன தந்தார்,
உன் மலர் கூந்தல் அலைபாய அவர்
என்ன சொன்னார்,
உன் வடிவான இதழ் மீது சுவை
என்ன தந்தார்,
உன் மலர் கூந்தல் அலைபாய அவர்
என்ன சொன்னார்,
உன் வடிவான இதழ் மீது சுவை
என்ன தந்தார்,
பெ: நீ இல்லாமல் யாரோடு உறவாட
வந்தேன்,
உன் இளமைக்கு துணையாக தனியாக
வந்தேன்,
ஆ: நான் மலரோடு தனியாக ஏன்
இங்கு நின்றேன்
என் மகராணி உனை காண
ஓடோடி வந்தேன்..
பெ: பொன் வண்டொன்று மலரென்று
முகத்தோடு மோத,
நான் வளை கொண்ட கையாலே
மெதுவாக மூட,
பொன் வண்டொன்று மலரென்று
முகத்தோடு மோத,
நான் வளை கொண்ட கையாலே
மெதுவாக மூட,
என் கருங்கூந்தல் கலைந்தோடி
மேகங்களாக,
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம்
உண்மை கூற,
என் கருங்கூந்தல் கலைந்தோடி
மேகங்களாக,
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம்
உண்மை கூற,
நீ இல்லாமல் யாரோடு உறவாட
வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக
வந்தேன்..
ஆ: நான் மலரோடு தனியாக ஏன்
இங்கு நின்றேன்,
என் மகராணி உனை காண
ஓடோடி வந்தேன்..
கருத்துகள்
கருத்துரையிடுக