முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்பே அன்பே கொல்லாதே



அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதேபெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதேஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே
அன்பே அன்பே கொல்லாதேகண்ணே கண்ணை கிள்ளாதே

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்அடடா பிரம்மன் கஞ்சனடிசற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்ஆஹா அவனே வள்ளலடிமின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்துரவிவர்மன் எழுதிய வதனமடிநூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச்சிற்பிகள் செதுக்கிய உருவமடிஇதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்நீதான் நீதான் அழகியடிஇத்தனை அழகும் மொத்தம் சேர்ந்துஎன்னை வதைப்பது கொடுமையடி

அன்பே அன்பே கொல்லாதேகண்ணே கண்ணை கிள்ளாதே
கொடுத்து வைத்தப் பூவே பூவேஅவள் கூந்தல் மணம் சொல்வாயாகொடுத்து வைத்த நதியே நதியேஅவள் குளித்தச் சுகம் சொல்வாயாகொடுத்து வைத்த கொலுசேகால் அழகைச் சொல்வாயாகொடுத்து வைத்த மணியேமார் அழகைச் சொல்வாயா

அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பிஅங்கே உனக்கொரு வீடு செய்வேன்உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டுஉயிருக்கு உயிரால் உறையிடுவேன்

மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்துமெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போதுநட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்பால் வண்ணப் பறவை குளிப்பதற்காகபனித்துளி எல்லாம் சேகரிப்பேன்தேவதை குளித்த துளிகளை அள்ளித்தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்
அன்பே அன்பே கொல்லாதே
அன்பே அன்பே கொல்லாதேகண்ணே கண்ணை கிள்ளாதேபெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதேஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே
அன்பே அன்பே கொல்லாதேகண்ணே கண்ணை கிள்ளாதே

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா…

 செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா… தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா… இரு கரை மீதிலே தன் நிலைமீறியே… ஒரு நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே… ஓ… செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா… தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா… வெண்பனி போலே கண்களில் ஆடும்… மல்லிகை தோட்டம் கண்டேன்… அழகான வெள்ளைக்கிங்கே கலகங்கள் இல்லை… வெண்பனி போலே கண்களில் ஆடும்… மல்லிகை தோட்டம் கண்டேன்… அழகான வெள்ளைக்கிங்கே கலகங்கள் இல்லை… அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை… செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா… தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா… மின்னலை தேடும் தாழம்பூவே… உன் எழில் மின்னல் நானே… பனிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே… ஆஹாஹா… மின்னலை தேடும் தாழம்பூவே… உன் எழில் மின்னல் நானே… பனிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே… உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காகதானே…  செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா… தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா… அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி… ஊர்வலம் போகும் வேளை… நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம் கண்டேன்… அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி… ஊர்வலம் போகும் வேளை… நி...

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

  பெண்: நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ம்  ம்ம்  நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ம்  ம்ம்  ஆண்: நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும் ம்ம் ம்ம் நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும் ம்ம் ம்ம்  இருவரும்: நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ம்  ம்ம்  பெண்: பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும் பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் பசியாற வேண்டும் மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும் ம் ம்ம் மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும் ம்  ம்ம் நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் ம்  ம்ம்  நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ம்  ம்ம்  பெண்:  சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை பொருளென்றும் இல்லை சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை ...

என்மேல் விழுந்த மழைத்துளியே

என்மேல் விழுந்த மழைத்துளியே  இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே. இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.(2) என்னை எழுப்பிய பூங்காற்றே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்னை மயக்கிய மெல்லிசையே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் உடம்பில் உறைகின்ற ஓருயிர்போல் உனக்குள் தானே நானிருந்தேன்...........   மண்ணைத் திறந்தால் நிரிருக்கும் என் மனதைத் திறந்தால் நீயிருப்பாய் ஒலியைத் திறந்தால் இசையிருக்கும் என் உயிரைத்திறந்தால் நீயிருப்பாய் வானம் திறந்தால் மழை இருக்கும்  என் வயதைத் திறந்தால் நீயிருப்பாய் இரவைத் திறந்தால் பகல் இருக்கும் என் இமையைத் திறந்தால் நீ இருப்பாய் என்மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே. இத்தனை நாளாய் எங்கிருந்தாய். இலையும் மலரும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ? அலையும் கரையும் உரசுகையில் பேசும் பாஷை பேசிடுமோ?... மண்ணும் விண்ணும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ? பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால் பாஷை ஊமை ஆகிடுமோ? என்மேல் விழுந்த மழைத்துளியே  இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே. இத்தனை நாள...