முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பழம் நீ அப்பா! ஞானப் பழம் நீ அப்பா!



முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து

ரசம் அன்பினொடு நான் உண்ணவும் கொடுத்த
நல்ல குருநாதன் உனக்கு என்ன விதம் இக்கனியை
நாம் ஈவது என்று நாணித் தான்
அப்பனித்தலையர் தரவில்லை!
ஆதலால் முருகா உனக்குச் சாரும் ஒரு
பிழையில்லையே!(3)



சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும்
சண்முகா உனக்கு குறையுமுளதோ?(5)
முருகா நீ ஏன் இப்படிக் கோவணத்தோடும் தண்டு
கொண்டு
இங்குற்றோ ஆண்டியானாய்?
எமது வினைபொடிபடவும் அல்லவோ நீ இப்படி
இங்கு இருக்கலாம்?
என் ஆசான், அப்பன், அன்னையாம் என்னவும்
எண்ணினேன்
தருமையரு பழனி மலையில்
சந்ததம் குடிகொண்ட
சங்கரன் கும்பிடும்
என் தண்டபாணித் தெய்வமே!


பழம் நீ அப்பா!
ஞானப் பழம் நீ அப்பா!
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!

திருச் சபை தன்னில் உருவாகிப்
புலவோர்க்குப் பொருள் கூறும்
பழனியப்பா!
ஞானப் பழம் நீ அப்பா!
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!

நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய்!
ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்!
திருக் கார்த்திகைப் பெண் பால் உண்டாய்!
உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!

ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு
உற்றார் பெற்றாரும் உண்டு!
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில்
நீ வாழ இடமும் உண்டு!
தாயுண்டு மனமுண்டு அன்புள்ள
தந்தைக்குத் தாளாத பாசம் உண்டு! உன்
தத்துவம் தவறென்று சொல்லவும் ஒளவையின்
தமிழுக்கு உரிமை உண்டு!!!

ஆறுவது சினம்! கூறுவது தமிழ்!
அறியாத சிறுவனா நீ?
மாறுவது மனம்! சேருவது இனம்!
தெரியாத முருகனா நீ?
ஏறு மயில் ஏறு!
ஈசனிடம் நாடு!
இன்முகம் காட்ட வா நீ!
ஏற்றுக் கொள்வார்!
கூட்டிச் செல்வேன்!
என்னுடன் ஓடி வா நீ!


💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா…

 செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா… தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா… இரு கரை மீதிலே தன் நிலைமீறியே… ஒரு நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே… ஓ… செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா… தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா… வெண்பனி போலே கண்களில் ஆடும்… மல்லிகை தோட்டம் கண்டேன்… அழகான வெள்ளைக்கிங்கே கலகங்கள் இல்லை… வெண்பனி போலே கண்களில் ஆடும்… மல்லிகை தோட்டம் கண்டேன்… அழகான வெள்ளைக்கிங்கே கலகங்கள் இல்லை… அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை… செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா… தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா… மின்னலை தேடும் தாழம்பூவே… உன் எழில் மின்னல் நானே… பனிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே… ஆஹாஹா… மின்னலை தேடும் தாழம்பூவே… உன் எழில் மின்னல் நானே… பனிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே… உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காகதானே…  செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா… தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா… அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி… ஊர்வலம் போகும் வேளை… நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம் கண்டேன்… அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி… ஊர்வலம் போகும் வேளை… நி...

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

  பெண்: நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ம்  ம்ம்  நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ம்  ம்ம்  ஆண்: நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும் ம்ம் ம்ம் நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும் ம்ம் ம்ம்  இருவரும்: நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ம்  ம்ம்  பெண்: பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும் பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் பசியாற வேண்டும் மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும் ம் ம்ம் மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும் ம்  ம்ம் நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் ம்  ம்ம்  நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ம்  ம்ம்  பெண்:  சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை பொருளென்றும் இல்லை சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை ...

என்மேல் விழுந்த மழைத்துளியே

என்மேல் விழுந்த மழைத்துளியே  இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே. இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.(2) என்னை எழுப்பிய பூங்காற்றே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்னை மயக்கிய மெல்லிசையே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் உடம்பில் உறைகின்ற ஓருயிர்போல் உனக்குள் தானே நானிருந்தேன்...........   மண்ணைத் திறந்தால் நிரிருக்கும் என் மனதைத் திறந்தால் நீயிருப்பாய் ஒலியைத் திறந்தால் இசையிருக்கும் என் உயிரைத்திறந்தால் நீயிருப்பாய் வானம் திறந்தால் மழை இருக்கும்  என் வயதைத் திறந்தால் நீயிருப்பாய் இரவைத் திறந்தால் பகல் இருக்கும் என் இமையைத் திறந்தால் நீ இருப்பாய் என்மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே. இத்தனை நாளாய் எங்கிருந்தாய். இலையும் மலரும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ? அலையும் கரையும் உரசுகையில் பேசும் பாஷை பேசிடுமோ?... மண்ணும் விண்ணும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ? பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால் பாஷை ஊமை ஆகிடுமோ? என்மேல் விழுந்த மழைத்துளியே  இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே. இத்தனை நாள...